புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை

புழல்: புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(37) கடந்த பிப்ரவரி மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை இவர் மாத்திரைகள் மற்றும் ஆணிகளை சாப்பிட்டு மயக்கமடைந்தார். இதைப் பார்த்த சக கைதிகள் சிறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆணி மற்றும் மாத்திரைகள் இவருக்கு எப்படி கிடைத்தது? எதனால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: