ஏழாயிரம்பண்ணையில் புதிய தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையம்: முதல்வர் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்

ஏழாயிரம்பண்ணை, ஏப்.11: ஏழாயிரம் பண்ணையில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஏழாயிரம்பண்ணையில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழாவில் விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் விவேகானந்தன் உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன், வெம்பக்கோட்டை நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் மற்றும் நிலைய அலுவலர் கண்ணன் கலந்து கொண்டனர்.

The post ஏழாயிரம்பண்ணையில் புதிய தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையம்: முதல்வர் காணொலி காட்சியில் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: