கட்டி முடித்தும் திறக்கப்படாதபொது கழிப்பிடம்

உடுமலை,ஏப்.9: ராகல்பாவி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.திறந்தவெளி கழிவறை இல்லாத நிலையை உருவாக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் தனி நபர் கழிப்பிடம் கட்டிக்கொடுக்கவும், பொதுக் கழிப்பிடம் அமைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், ராகல்பாவியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பிடம் திறக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கட்டி முடித்தும் திறக்கப்படாத

பொது கழிப்பிடம் appeared first on Dinakaran.

Related Stories: