சென்னை அருகே சட்டவிரோதமாக தங்கிய 16 வங்கதேசத்தினர் திருச்சி அகதிகள் முகாமுக்கு மாற்றம்

சென்னை: கேளம்பாக்கம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 16 வங்க தேசத்தினர் 3 மாத சிறைக்குப் பிறகு, திருச்சி அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டனர். கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் சாலையோரத்தில் குடில் அமைத்து வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டம் மற்றும் அயல் நாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடது. அனைவருக்கும் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 6ம்தேதியுடன் சிறை தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று அனைவரையும் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறையில் இருந்து அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள வெளிநாட்டு அகதிகள் தங்கும் முகாமில் சேர்த்தார். விரைவில் அவர்கள் அனைவரும் வங்கதேசத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

The post சென்னை அருகே சட்டவிரோதமாக தங்கிய 16 வங்கதேசத்தினர் திருச்சி அகதிகள் முகாமுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: