×

மக்களோடு வரிசையில் நின்ற கலெக்டர்

கிருஷ்ணகிரி, மார்ச் 27:கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கிய கலெக்டர், மக்களோடு வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு தொகையை செலுத்தி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், கடந்த பிப்ரவரியில் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு, கலெக்டர் தீபக் ஜேக்கப் வந்தார். அங்கு பொருட்களை வைக்க கூடிய கூடையை எடுத்து, பல்வேறு பொருட்களை தேர்ந்தெடுத்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்றார். அனைவருடனும் வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு விட்டு தொகையை செலுத்தி விட்டு, அங்கிருந்து சென்றார். கலெக்டரின் இந்த எளிமை, அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்