கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

வடலூர், மார்ச் 26: கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூரில் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். இதில் மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் துரை.கி சரவணன், முன்னாள் எம்எல்ஏ சண்முகம், மாவட்ட பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், மயிலாடுதுறை விவசாய அணி இணைச் செயலாளர் அருட்செல்வன், கொள்கை பரப்பு குழு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, தீர்மானக் குழு உறுப்பினர் சேதுநாதன், வர்த்தக அணி துணைச் செயலாளர் பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, ராமலிங்கம், தங்க.ஆனந்தன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி செயலாளர் ராஜா, கடலூர் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், காசிராஜன், தனஞ்செயன், விஜய சுந்தரம், பகுதி செயலாளர்கள் நடராஜன், சலீம், வெங்கடேசன், இளையராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் விக்ரமன், ஞானசேகரன், நகர செயலாளர்கள் கே.ஆர். செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ், விஜயராகவன், பேரூர் செயலாளர்கள் கணேசமூர்த்தி, மனோகரன், வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி சேர்மன் கோகிலா குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை தொடர்ந்து கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories: