தாட்கோ மூலம் 391 பேருக்கு ரூ.6.17 கோடி கடனுதவி

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2021-2022 ஆண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38 நபர்களுக்கு ரூ.66.96 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.23 கோடி கடனுதவியும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 34 நபர்களுக்கு ரூ.56.36 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.1.87 கோடி கடனுதவியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும்  பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 360 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.2.50 கோடி கடனுதவியும் என மொத்தம் 432  நபர்களுக்கு ரூ.1.98 கோடி மானியத்துடன் கூடிய ரூ.6.60 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: