வேணுகோபால சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம், மார்ச் 23: நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள தாயாரம்மாள், சுதர்சன ஆழ்வார், கருடாழ்வார், வைஷ்ணவி, ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மாலையில், வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் தம்பதியர்களாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ரமேஷ் பட்டாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: