கோவை: உலக தண்ணீர் தினத்தினையொட்டி சூலுார் அருகே கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்ததாவது: வெயில் காலம் தொடங்கிவிட்டது. தண்ணீர் மிகவும் அவசியமான காலம் இது. தண்ணீர் கிடைக்கும் வழி, சேமிக்கும் விதம் ஆகியவற்றை அறிந்தால் மட்டும்தான் நம்மால் வருங்காலத்திற்காக தண்ணீரை சேமிக்கவும் பயன்படுத்தவும் முடியும். கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் 55 லிட்டர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை முறையாக மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் கழிவு, மக்காத கழிவுகளை தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் நீர்வழிப்பாதைகளை அடைப்பதை தடுக்க முடியும். நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். குப்பைகளை தரம்பிரிக்காமல் வழங்குவது, சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். கிராமப்புறங்களில் வீடுகளின் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கவேண்டும். மக்காத பொருட்களை மறுசுழற்சி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்க்கூடாது. மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிராம சபை கூட்டத்தில் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணைத்தலைவர் எம்.ராஜு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கைகோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாபிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். தற்பொழுது எல்லா வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனிடையே இன்று முதல் தூய்மை பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்வதால் மிகப் பெரிய அளவு சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் உள்ளது. ஆகவே இதை தடுக்கும் வகையிலும் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் உடனடியாக அனைவரையும் அழைத்துப் பேசி வேலைநிறுத்த போராட்டத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.