கோவை: கோவை குனியமுத்தூர் சோழன் நகரை சேர்ந்தவர் கரிகாலன் (38). இவர், மேட்டுப்பாளையம் ரோட்டில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மற்றொருக்கும் தொழில் போட்டியில் மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கரிகாலன் தனது வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 பேர் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து கரிகாலன் அளித்த புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.