சிதம்பரம், மார்ச் 22: சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சித்தலபாடி டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் ரவாண்டா நாட்டை சேர்ந்த கிகாலி கிமிஹுராரா பகுதியை சேர்ந்த கட்டோரா மகன் கட்டோரா ஏமி டி ஜிஹோவா(29) என தெரிய வந்தது. இவர் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது.