தென்னிந்திய குறும்பட போட்டி ஏப்.5ல் துவக்கம்

கோவை:  கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான பதிவுகள் என்ற தலைப்பில் குறும்பட போட்டி வரும் ஏப்ரல் 5ம் தேதி துவங்குகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் வகையில், இரு தினங்கள் நடக்கும் இந்தப் போட்டியில், 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் காண்பிக்கப்படவுள்ளது. முதல் பரிசு பெறும் குறும்படத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்  பரிசு வழங்கப்படும். இரண்டாவது பரிசாக 7500 ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.  சிறந்த குறும்பட இயக்குநர், எடிட்டர், ஒலி பொறியாளர், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர், நடிகை ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும்.  மேலும், இவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும்.

Related Stories: