10ம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர் ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி, மார்ச் 21:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கிராமத்தை  சேர்ந்த 15 வயது மாணவி விருகாவூர் அரசு மாதிரி பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வருகிறார். பள்ளியில் மாலை நேரங்களில்  சிறப்பு வகுப்பு நடந்ததால் பேருந்தில் மாணவி, வீடு திரும்புவார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாணவியின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதே ஊரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  தங்கதுரை(21) என்பவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் தங்கதுரைக்கும் பள்ளி மாணவிக்கும்  பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்த பெற்றோர், மகள் மற்றும் டிரைவரை கண்டித்துள்ளனர். மாணவியும்  தங்கதுரையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த 17ம் தேதி பள்ளி முடிந்து பஸ்சில் வீடு திரும்பினார். அப்போது அதே பேருந்தில்  பயணம் செய்த டிரைவர் தங்கதுரை தன்னுடன் வர மறுத்த மாணவியை தாக்கி பிரச்னை செய்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் ஆட்டோ டிரைவர் தங்கதுரையை  கண்டித்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர். தகவலறிந்த பெற்றோர், இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும்  போலீசார் ஆட்டோ டிரைவர் தங்கதுரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்து  தங்கதுரையை கைது செய்தனர்.

Related Stories: