×

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சேலம், : சேலம் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியத்தின் சமூக நலத்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் சாந்தா (59). இவருக்கு கடந்த மாதம் 18ம் தேதி, செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியநபர், சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் காமராஜர்காலனியைச் சேர்ந்த சூர்யா (22) என்ற வாலிபர், 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று குழந்தை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி சாந்தா, அலுவலர்களுடன் இணைந்து விசாரணை நடத்தினார். அதில் வாலிபர் சூர்யா, தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து அழைத்து வந்து, திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொ) செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்ய தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை