கோவை, மார்ச் 19: பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ஆனைமலைஸ் சிட்ஸ், ஸ்ரீ அன்னபூரனி, அண்ணாமலையார், அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ் மற்றும் சதாசிவம் சிட்ஸ் பண்ட்ஸ் என்ற பெயர்களில் இயங்கி வந்த சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்றனர். சீட்டு நடத்தியும் இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.