நிதி நிறுவன மோசடி: புகார் தர அழைப்பு

கோவை, மார்ச் 19: பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில்  ஆனைமலைஸ் சிட்ஸ்,  ஸ்ரீ அன்னபூரனி, அண்ணாமலையார், அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ் மற்றும் சதாசிவம் சிட்ஸ் பண்ட்ஸ் என்ற பெயர்களில் இயங்கி வந்த சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்றனர். சீட்டு நடத்தியும் இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.

இதனை திருப்பி தராமல் மோசடி செய்தவர்கள் மீது புகாரின்பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணையில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த அசல் ஆவணங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தை அணுகி புகார் தரலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: