சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம், மார்ச் 18:தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு துணைத்தலைவர் சித்திக் தலைமை வகித்தார். சங்க பொறுப்பாளர்கள் சாமுவேல், காளீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகி பாஷா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வடிகால் வாரிய சங்க பொறுப்பாளர் சசிகுமார், பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் அப்துல்சமது ஷாநவாஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்து வரும் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Related Stories: