பண்ருட்டி, மார்ச் 18: பண்ருட்டி அருகே பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கவார்த்தாள் மகன் அழகுவேல் (30). இவர் கேரளாவில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (27) என்பருக்கும் திருமணம் ஆகி இரண்டரை வருடம் ஆகிறது. திருமணம் நடந்த நாள் முதல் இருவரும் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென தமிழ்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரளா காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி உடலை மணமகன் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரான பணப்பாக்கம் கிராமத்தில் தகனம் செய்தனர்.