×

செங்கல்பட்டில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு,  மார்ச் 18: செங்கல்பட்டில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்க உள்ளது. இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு  கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,  தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், 2023ம் ஆண்டிற்கான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை (18.3.2023) நடக்க உள்ளது.  செங்கல்பட்டில் வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில், 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்