கண்டமங்கலம், மார்ச் 17: கண்டமங்கலம் அருகே சோரப்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பலராமன் (எ) சேட்டு (65). திருமண புரோக்கர். கடந்த மாதம் 26ம் தேதி பலராமன் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சிமெண்ட் ஓடு வாங்குவதற்கு சோரப்பட்டில் இருந்து பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு ராதாபுரம் வழியாக வந்துள்ளார். ராதாபுரம் பகுதிக்கு வரும்போது மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகிலேயே அமர்ந்துவிட்டார். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம் பலராமன் தனக்கு மயக்கம் ஏற்பட்டு சோர்வாக உள்ளது, தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுமாறும் கேட்டுள்ளார். உடனே ஒருவர் பலராமனின் பைக்கை எடுத்துக் கொண்டும், மற்றொருவர் பலராமனை இன்னொரு வாகனத்தில் பின்பக்கமாக அமர வைத்துகொண்டு திருக்கனூர் பகுதியை நோக்கி சென்றனர். திருக்கனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளுமாறு பலராமன் வாலிபர்களிடம் தெரிவித்துள்ளார்.