சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழும் போராட்டம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 17: அதானி குழுமத்துக்கு ஒன்றிய அரசு துணை போவதை கண்டித்தும், சமையல் காஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும் காட்டுமன்னார் கோவிலில் மகிளா காங்கிரஸ் சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடந்தது. மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கரோலின் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் மணிரத்னம் பேசினார். முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி வரவேற்றார். சமையல் காஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அதானி குடும்பத்தின் முறைகேட்டை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் பெண்கள் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழுதனர். விறகு அடுப்பில் சமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டார தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: