ஜாமீன் ரத்து செய்து 2 பேர் கைது

கோவை, மார்ச் 17:  கோவை ஆத்துப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன் (25). இவர் கஞ்சா, போதை  பொருட்கள் கடத்தல் வழக்கில் குனியமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இவர், மதுரை தல்லாகுளம் போலீசில் வழக்கு ஒன்றில் நிபந்தனை கையெழுத்து போட வேண்டியிருந்தது. ஆனால் இவர் கையெழுத்து போடாமல் கடந்த 3ம் தேதி முதல் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இவருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தீத்திபாளையம் அருண் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (24) என்பவர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்தார்.

இவர் வேறு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனை இருந்த போதும், அதையும் மீறி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது. இவர் ஆயுதம் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ள நிலையில், போலீசார் இவரின் ஜாமீனை ரத்து செய்தனர். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருணாச்சல தேவர் காலனியை சேர்ந்த பிரசன்னா (22) என்பவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போடாமல் இருந்த நிலையில் இவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர போலீசார் கைது செய்தனர்.

Related Stories: