போலீஸ் நிழற்குடையில் ஏர் கூலர்

கோவை, மார்ச் 17:  கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் வெயிலில் நின்று பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ரோட்டில் வெயில் தாக்கம் இன்றி வேலை செய்யும் வகையில் ஆங்காங்கே நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி பகுதியில் உள்ள நிழற்குடை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் உள்ள நிழற்குடையில் பேன், ஏர்கூலர் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற பகுதியில் உள்ள நிழற்குடையிலும் போலீசாருக்கு பேன், ஏர்கூலர் வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் போலீசாருக்கு மோர், லெமன் ஜூஸ் வழங்குவதும் நடக்கிறது.

Related Stories: