கோவை: கோவையில் இளம்பெண் பெயரில் போலி இன்ஸ்டாகிராமை துவங்கி ஆபாச போட்டோ பதிவேற்றம் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சமூக வலைதளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது பெயரை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் போலி இன்ஸ்டாகிராமை துவக்கி உள்ளார். மேலும் இளம்பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களுடன் இளம்பெண் போன்று சாட்டிங் செய்து வந்துள்ளார்.