குன்னம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோயிலில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குன்னம் அருகே சு.ஆடுதுறை வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3வது துறையாக சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தவர் கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் மாசி மகம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா 9ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை பஞ்சமுர்த்திகளுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18 வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது.