திருவாரூர்,அக்.1: பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்தியுள்ள தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் புவன பிரியா செந்தில் தலைமையிலும், துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், கமிஷனர் பிரபாகரன், மேலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் பிரகாஷ், செந்தில், சங்கர், அசோகன், அய்யனார், சின்னவீரன், வரதராஜன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்களது வார்டு பகுதி கோரிக்கைகள் குறித்து பேசியதுடன் நகர் முழுவதும் மழை காலத்திற்கு முன்னதாக பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்திட வேண்டும். வடிகால் வசதியினை சரி செய்திட வேண்டும்.