திருப்பூர்,செப்.30: உடுமலை அருகே ரூ.6.30 கோடி மதிப்பிலான 21.10 ஏக்கர் ஆக்கிமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் கொங்கல் நகரம் மாரியம்மன், விநாயகர் கோயிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் உள்ளூர்வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், இந்த நிலத்தை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்புதாரர்கள் தாமாகவே முன்வந்து நிலத்தை ஒப்படைத்தனர்.