காரைக்குடி, செப்.29: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. சமூகவியல் துறை பேராசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், உலக சுகாதார புள்ளி விவரங்களின்படி உலகவில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கான நான்காவது காரணமாக தற்கொலை இருக்கிறது. 77 சதவீத தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. நிதி சிக்கல்கள், உறவு முறிவுகள், நாள்பட்ட நோய் மற்றும் வலி போன்றவைகளால் ஏற்படும் மனஅழுத்தங்களை சமாளிக்கும் திறன் குறைவதால் நெருக்கடியான தருணங்களில் தற்கொலை நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது.