விளாத்திகுளம், செப். 27: புதூர் யூனியனில் ரூ.65 லட்சத்தில் கிராம மேம்பாட்டு திட்டப் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதூர் யூனியனுக்குட்பட்ட மேலஅருணாசலபுரம் பஞ். வன்னிப்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை, ஊரணி மேம்பாட்டு பணிகள் மற்றும் உலர்களம் அமைத்தல், பூதலாபுரம் கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்தல், பேவர் பிளாக் சாலை மற்றும் ஊரணி மேம்பாட்டு பணிகளின் துவக்க விழா நடந்தது. விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமை வகித்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் அவசியத்தை விளக்கினார்.