வேட்பு மனு தாக்கல் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் அமைப்பு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருப்பூர், செப்.24: திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத்த தமிழக அரசுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பாரதிராஜா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற டிசம்பர் 30, 31 ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதற்கான கண்காட்சி பிரவுசரை சங்கத் தலைவர் ஸ்டாலின் பாரதி வெளியிட கண்காட்சித் தலைவர் துரைசாமி பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

 திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைத்ததற்காகவும், வளர்ச்சி குழுமத்தில் உறுப்பினராக சங்கத்தின் முன்னாள் தலைவர் சண்முகராஜை நியமித்ததற்காகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அனுமதி பெற்று கட்டப்படும் கட்டிடங்களில் விதி மீறல்கள் இருந்தால், அதற்கு பதிவுபெற்ற பொறியாளர்கள் பொறுப்பு என்பதை நீக்க வேண்டும். கட்டிட அனுமதிக்கான வரைபடத்தில் கையெழுத்திட உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்று ஒவ்வொரு இடத்திலும் பொறியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதை மாற்றி ஒரே இடத்தில் பதிவு செய்வதற்கான ஆவணம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், உடனடி முன்னாள் தலைவர் முரளி, துணைத் தலைவர் பழனிச்சாமி, துணை செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories: