தர்மபுரி, செப்.23: தர்மபுரியில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விதி மீறி செயல்பட்ட 2 கடைகள் அகற்றப்பட்டன. தர்மபுரி டவுன் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக தர்மபுரி -சேலம் பைபாஸ் சாலையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், 3 ஆயிரம் சதுர அடியில் இருந்த இரு கடை உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக வாடகை நிலுவை வைத்துள்ளதோடு சட்ட விரோதமாக உள்வாடகைக்கு வேறு நபருக்கு விட்டது அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து, சேலம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவின்பேரில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.