கோவில்பட்டி, செப். 21: கோவில்பட்டியில் விவசாய நிலத்தில் ஆண் உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளத்தில் தனியாருக்குச் சொந்தமான உழவு செய்யப்பட்ட நிலத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஆண் உடல் கிடந்தது. இதுகுறித்து விஏஓ கிருத்திக்பாபு, கொப்பம்பட்டி போலீசில் புகார் செய்தார்.