காரியாபட்டி, செப். 21: காரியாபட்டியில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, காய்கறி சந்தை அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள், பேரூராட்சி தலைவர் செந்திலிடம் மனு அளித்தனர். காரியாபட்டி பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது அடிப்படை தேவைகளான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், காரியாபட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய பெரும் நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால், காரியாபட்டியில் காய்கறி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.