தொண்டாமுத்தூர், செப்.20: வடவள்ளி அருகே அடுத்தடுத்து பூட்டிய 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே சுண்டப்பாளையம் எஸ்எம் நகரை சேர்ந்தவர் சதாசிவம் (62). கோவை ரயில்வேத்துறையில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சதாசிவம் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.