ஈரோடு,செப்.2:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஈரோடு, கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ”சிறார் திரைப்பட விழா” நேற்று நடைபெற்றது. இதில், “சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன்” எனும் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை 680 மாணவிகள் கண்டுகளித்தனர்.தொடர்ந்து, திரைப்படம் குறித்து மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.மேலும் மாணவிகள், திரைப்படம் குறித்த தங்களது விமர்சனத்தையும் எழுதி சமர்ப்பித்தனர்.