கோவில்பட்டி, ஆக.11: கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைக்கு சொந்தமான ஈ.வே.அ.வள்ளிமுத்து துவக்க, உயர்நிலைப்பள்ளிகளின் 66வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலர் வேல்முருகேசன் தலைமை வகித்தார். தொழிலதிபர் திலகரத்தினம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வினோத்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நகர செயலாளர் விஜயபாண்டியன், கடம்பூர் இந்து நாடார் உறவின்முறை சங்க பொதுச் செயலாளர் காளிராஜன், 5வது வார்டு அவைத்தலைவர் செல்வமணி, செயலாளர் நல்லவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.