திருப்பூர், ஆக. 10: நிப்ட்-டீ கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத்தில் நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் திருப்பூருக்கு மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு, தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலுடன் இணைந்து தரவு மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தீபக்குமார் மற்றும் மணீஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தின் முக்கியத்துவத்தை குறித்து விளக்க பேசினர். கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப துறை தலைவர் அருள் செல்வன் பேசும் போது, நிப்ட்-டீ கல்லூரி கடந்த10 ஆண்டுகளில் உடன் இணைந்து இவ்வாறு புதிய முயற்சிகளை செய்து வருகிறது. தற்பொழுது திருப்பூர் கிளஸ்டர் நிகர பூஜ்ஜிய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்று மத்திய அரசிடமிருந்து பெறுவதற்க்காக தரவுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்க்கு மாணவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம், அதன் மூலம் மாணவர்கள் பெறும் நன்மைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறினார் .