தஞ்சாவூர், ஆக.10: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டு மற்றும் பேருந்தின் மேற்பகுதியில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் பேருந்தில் நேற்று காலை 10 மணியளவில் இளைஞர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபடி இருந்தனர். இதையடுத்து அங்கு காவல் பணியில் இருந்த தஞ்சை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் இருந்த காவலர்கள் பேருந்தை மறைத்தனர்.