ஆலங்குடி,ஆக.10: டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஆலங்குடி அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு 14 அரசு நகர பேருந்துகள் செயல்பட்டு வருகின்றது. இப்பேருந்துகள் அருகில் உள்ள வெட்டன்விடுதி, குப்பகுடி, வெங்கிடகுளம், நெடுவாசல், மாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றது. இந்நிலையில் பேருந்துகளுக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை காரணமாக சில நகர பேருந்துகள் இயக்கப்படாமல் பணி மனையிலும் பேருந்து நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்து வருகின்றது.