கலெக்டர் எச்சரிக்கை பிரதமர் வெகுமதி திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை அழைப்பு

வேதாரண்யம்,ஆக.8: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு விவசாயிகளுக்கு பாரத பிரதமர் விவசாயிகள் வெகுமதி திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதி விவசாயிகள் பாரத பிரதமர் விவசாயிகள் வெகுமதி திட்டத்தின் கீழ் நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டுக்கு 6000 உதவித்தொகை பெற்று வந்தவர்கள் தொடர்ந்து அர்த்தத்தில் பயன்பெறுவதற்கு ஆதார் அட்டை கணினி திட்டம் வங்கி கணக்கு எண் அருகிலுள்ள இ சேவை மையத்தை அதில் பதிப்பித்துக் சரிபார்த்து கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் உதவி அலுவரிடம் சமர்பிக்க வேண்டும். ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தான் உண்மை தன்மை அறிந்து அதன் பிறகுதான் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையும் தொடர்ந்து உதவித்தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: