பொள்ளாச்சியில் இருந்து கிசான் ரயில் இயக்க வலியுறுத்தல்

உடுமலை: விவசாயிகள் பெரும் அளவு பயன்பெறும் வகையில் பொள்ளாச்சியில் இருந்து மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில் இயக்க வேண்டும் என திமுக எம்பி சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், ரயில்வே வாரிய தலைவர் வினய்குமார் திரிபாதியை டெல்லியில் சந்தித்து மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். போத்தனூர் சந்திப்பை, கோவை ரயில் நிலையத்துக்கு நிகராக துணை ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து விவசாயிகள் பெரும் அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இதையடுத்து, மனுவை படித்த ரயில்வே வாரிய தலைவர், உடனடியாக ரயில்வே பொதுமேலாளர் மல்லையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சண்முகசுந்தரம் எம்பியின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Related Stories: