திருப்பூர், ஜூலை 30: தொழிலாளர், ஜனநாயக விரோத போக்கை ஒன்றிய அரசு கடைபிடிப்பதாகவும், இதனை பேசிய எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறி திருப்பூரில் தொமுச பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் ரயில் நிலையம் முன்பு நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டிகேடி மு.நாகராசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தொமுச பேரவை செயலாளர் ஜீவா சிதம்பரசாமி, துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்வாரிய தொமுச ஈ.பி.அ.சரவணன், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.