கோவை, ஜூலை 28: பாராளுமன்றத்தில் இருந்து 6 திமுக எம்.பி.க்கள் உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட திமுக தொழிற்சங்கம் (தொமுச) சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச கவுன்சில் செயலாளர் சிடிசி மணி தலைமை தாங்கினார். தொமுச கவுன்சில் துணை செயலாளர் தமிழ்செல்வன், தொமுச ரேஷன் ஊழியர் சங்க மாநில தலைவர் உமாகாந்தன், கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, முருகேசன் மற்றும் ராக்கிமுத்து, வணங்காமுடி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.