கார் விபத்தில் இளைஞர் பலி

மூணாறு, ஜூன் 14: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜிமோன் (39). இவர், நேற்று முன்தினம் தனது சகோதரியுடன் பாம்பன்மலை எஸ்டேட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். விஜிமோனுடன் காரில் 4 பேர் இருந்தனர். இரவு 8 மணி அளவில் நாச்சிவயல் பகுதியில் உள்ள வனஅலுவலகம் அருகே, கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், விஜி மோன் பலத்த காயம் அடைந்தார் உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மறையூர் சமூக நல மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: