பிறந்த நாள் பேச்சுப் போட்டி பழநி மாணவர் முதலிடம்

திண்டுக்கல்: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர் நாகார்ஜூன் முதல் பரிசும், தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கல்லூரி மாணவி மோகனப் பிரியா இரண்டாம் பரிசும், திண்டுக்கல் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவி லீலா மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்குவார்.

Related Stories: