கழுகுமலை, ஜூன்4: கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் கோமதி சங்கர் (17). இவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு மேல் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கரலிங்கபுரத்திலிருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த டிப்பர் லாரியை சொக்கநாதன்புத்தூர் மேலதுரைசாமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடசாமி (48) என்பவர் ஓட்டி வந்தார்.
