திருவாரூர், மே 28: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார். திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் தேசிய கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 8.30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த கவர்னர் ரவி, பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர், திருவாரூர் வழியாக மத்திய பல்கலைக்கழகம் சென்றடைந்தார். அங்கு கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிவிட்டு மதிய உணவிற்கு பின்னர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.