கந்தர்வகோட்டை, மே 24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தினை காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமையில் பயனாளிகளுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில் தமிழகரசில் இந்த திட்டத்தின் கீழ் 13 துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் விவசாயிகள் பெருமளவில் நல்லதொரு பயன் அடையலாம் என்று கூறினார். கிராமங்கள் தொரும் ஊராட்சி செயலகம் கட்டப்படும் இதில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் என இணைந்து செயல்படுவார்கள் என தமிழக முதல்வர் கூறியுள்ளார் என கூறினார்.