விழிப்புணர்வு பயிற்சி முகாம்

திருவில்லிபுத்தூர், மே 18: திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் மேலாண்மை தனியார் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தார். இந்த பயிற்சி கூட்டத்தில் நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் சந்திரா, நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  

மேலும் இந்நிகழ்வில் விரைவில் திறக்கப்பட உள்ள கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு ஆலை பற்றியும், அதில் நடைபெறவிருக்கும் செயல்முறைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: