கடலூர், மே 14: நெய்வேலி தெற்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்த குணசேகரன் (65) என்பவர் காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு தனது தாயாருக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை, தனது தம்பி செந்தில்குமார் வைத்துக் கொண்டு தர மறுத்து பிரச்னை செய்வதாக புகார் தெரிவித்ததன்பேரில் மந்தாரக்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அண்ணன், தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சொத்து பாகப்பிரிவினை தொடர்பான பிரச்னை என்பதால், நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளும்படியும், மேற்கொண்டு எந்த ஒரு பிரச்னையும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.