மலேசியாவில் கொத்தடிமையாக உள்ள மகனை மீட்டுத்தர வேண்டும் பெற்றோர் மனு

விருதுநகர், மே 10: விருதுநகர் கலெக்டரிடம் சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சர்க்கரைராஜ் தனது மனைவியுடன் நேற்று மனு அளித்தார். மனுவில், எங்கள் மகன் மாரீஸ்வரன்(27), 2016ல் அருப்புக்கோட்டை குருந்தமடத்தை சேர்ந்த நாகராஜ் மூலம் மலேசியாவில் உள்ள ஓட்டலில் வேலைக்கு சென்றார். கடந்த 6 ஆண்டுகளாகியும் மகனிடம் இருந்து எந்த தகவலும், பணம் எதுவும் வரவில்லை. மகனை மலேசியா ஓட்டல் உரிமையாளர் கொத்தடிமையாக வைத்து சித்திரவதை செய்கிறார். ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து இன்று வரை உரிய பதில் கிடைக்கவில்லை. மகன் மாரீஸ்வரனை மீட்டுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: